‛குணா' ரீ-ரிலீஸிற்கான தடை நீக்கம் : ஐகோர்ட் உத்தரவு | ‛தி கோட்' - முதல்நாளில் ரூ.126.32 கோடி வசூல் | மாஸ்க் அணிந்தபடி கோட் படம் பார்க்க சென்ற மீனாட்சி சவுத்ரி | நடிகை பிரணிதாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது | மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் கிழக்கு சீமையிலே அஸ்வினி | படுகர் இன முறைப்படி நடந்த சாய் பல்லவி தங்கை திருமணம் | நானியின் புதிய படம் அறிவிப்பு | தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர் | இயக்குனர் சிபி திருமணம் : சாப்ட்வேர் இன்ஜினியரை மணந்தார் | நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு : மறுக்கும் இயக்குனர்கள் |
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'வீராயி மக்கள். வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் படம் பற்றி இயக்குநர் நாகராஜ் பேசியதாவது: இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோபம், வாழ்க்கை, வாழ்வியல். முதல் படம் முடித்த பிறகு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை நான் எழுதி முடித்ததும், நான் முதன் முதலாக தேர்வு செய்தது வேல ராமமூர்த்தியைத்தான், அவர்தான் வேண்டுமென்று நினைத்தேன், அவரும் ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும், கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் மண் மனம் மாறாத கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதேபோல அனைத்தும் அமைந்தது விட்டது.
மறைந்த மாரிமுத்து சாரின் உழைப்பு இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. சிதைந்து போன கூட்டுக்குடும்ப வாழ்கை மீண்டும் வர வேண்டும் என்பதை வற்புறுத்தும் படம் இது என்றார்.