பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகர் தனுஷ் முன்னனி நடிகராக வலம் வந்தாலும் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
இயக்குனராக ப.பாண்டி எனும் படத்தை இயக்கினார். தற்போது ‛ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து தனுஷ் நான்காவது முறையாக படம் ஒன்றை இயக்கி அவரே நடிக்கவுள்ளார் என சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இது குறித்து விசாரித்தபோது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.