மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி |
நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு தினம் நாளை(ஜூலை 21) அனுசரிக்கப்டுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான நிகழ்ச்சியாக முதல் நிகழ்ச்சியாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. பாரத் கலாச்சார், சிவாஜி ரசிகர் மன்றம், அப்பாஸ் கல்சுரல் அமைப்புகள் இணைந்து இதனை நடத்துகின்றன.
நாளை மாலை 6 மணிக்கு தி.நகர் பத்மசேஷாத்திரி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒய்ஜிபி ஆடிட்டோரித்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 'மன்னவன் வந்தானடி' என்ற தலைப்பில் சிவாஜியின் படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு டாக்டர் ராதி சுராஜித் குழுவினர் நடனமாடி சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.