மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன். தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், காத்திருந்து காத்திருந்து, அந்திநேர தென்றல் காற்று போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். நடிகர் ஜெமினி கணேசன் காலம் முதல் பாடிவரும் இவருக்கு தற்போது 80 வயது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி பரவி வருகிறது.
இது குறித்து பலரும் ஜெயச்சந்திரனின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயச்சந்திரனின் குடும்பத்தினர் இதுகுறித்து கூறும்போது, ஜெயச்சந்திரன் தற்போது நலமாகவே இருக்கிறார். வயதானவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சில உபாதைகளுக்காக தேவைப்படும்போது சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது சோசியல் மீடியாவில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதனால் தேவையில்லாமல் அவரது உடல்நிலை குறித்த தவறான தகவல்களை வதந்திகளாக பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.