ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
இந்திய சினிமாவை குறிப்பாக தென்னிந்திய சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சினிமாவின் சிகரமான ஆஸ்கரையும் தொட்டார். 2001ம் ஆண்டு 'ஸ்டூடண்ட் நம்பர்-1' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கினார். என்றாலும் 2012ம் ஆண்டு இயக்கிய 'நான் ஈ' படம் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியை பெற்றது. சாதாரண நடிகராக இருந்த நானியும், நடிகையாக இருந்த சமந்தாவும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்கள்.
'பாகுபலி' இரண்டு பாகங்கள், ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரதத்தை 4 பாகங்களாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்கு இடையில் மகேஷ் பாபு நடிக்கும் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இந்த அசுர வளர்ச்சி, அவரின் கடின உழைப்பு, அவரது குடும்பம் இவற்றை அடிப்படையாக வைத்து 'மார்டன் மாஸ்டர்ஸ்' என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்று தயாராகி உள்ளது. இதனை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதனை ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.