சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
இந்திய சினிமாவை குறிப்பாக தென்னிந்திய சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சினிமாவின் சிகரமான ஆஸ்கரையும் தொட்டார். 2001ம் ஆண்டு 'ஸ்டூடண்ட் நம்பர்-1' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கினார். என்றாலும் 2012ம் ஆண்டு இயக்கிய 'நான் ஈ' படம் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியை பெற்றது. சாதாரண நடிகராக இருந்த நானியும், நடிகையாக இருந்த சமந்தாவும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்கள்.
'பாகுபலி' இரண்டு பாகங்கள், ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரதத்தை 4 பாகங்களாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்கு இடையில் மகேஷ் பாபு நடிக்கும் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இந்த அசுர வளர்ச்சி, அவரின் கடின உழைப்பு, அவரது குடும்பம் இவற்றை அடிப்படையாக வைத்து 'மார்டன் மாஸ்டர்ஸ்' என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்று தயாராகி உள்ளது. இதனை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதனை ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.