Advertisement

சிறப்புச்செய்திகள்

இனி இதை செய்தால் தான் டிக்கெட் கட்டண உயர்வு : கட்டுப்பாடு விதித்த தெலங்கானா முதல்வர் | நீட் தேர்வுக்கு எதிராக வாய் திறந்தார் விஜய் : அங்குலம் அங்குலமாக அரசியலை ஆரம்பித்தார் | மைசூரில் பிலிம் சிட்டி: கர்நாடக முதல்வர் அறிவிப்பு | 'ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு குடிக்கிறவனை தப்பு சொல்வதா?': பாட்டல் ராதா படத்தின் டீசர் வெளியானது! | ‛தீரன் அதிகாரம் இரண்டு' : மீண்டும் கார்த்தி - வினோத் கூட்டணி | ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா 'மகாராஜா'? | விதி விளையாடிவிட்டது : தர்ஷன் பற்றி மனம் திறந்த சிவராஜ்குமார் | நாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜூ | பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்திக் | ரூ.3 லட்சத்திற்கு ஏலம்போன மம்முட்டி எடுத்த புகைப்படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பஹத் பாசில் படத்தால் சுகாதார அதிகாரிகளுக்கு சிக்கல்

01 ஜூலை, 2024 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Health-authorities-in-trouble-over-Fahad-faasil-film

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஆவேசம். ஜித்து மாதவன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் ஒரு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தற்போது பெயின் கிளி என்கிற படத்தை தயாரித்து வருகின்றனர். ஆவேசம் படத்தில் பஹத் பாசில் நடித்த ரங்கன் கதாபாத்திரத்திற்கு வலது கையாக அம்பானி என்கிற ரவுடியாக நடித்திருந்த சஜின் கோபு இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு படக்குழுவினரால் பல்வேறு வித சிரமங்கள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

அது மட்டுமல்ல மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவை கூட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்துவதற்கு பயன்படுத்தினார்கள் என்றும் படப்பிடிப்பிற்காக மின்விளக்குகளில் வெளிச்சத்தை கட்டுப்படுத்தினார்கள் என்றும் இதனால் நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்பட்டது என்றும் மனித உரிமை ஆணயத்துக்கு புகார் சென்றது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய சுகாதார அதிகாரிகள் அனைவருக்கும் இது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது மனித உரிமை ஆணையம். அதேசமயம் மலையாள தயாரிப்பாளர் சங்கமோ தாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு பணம் செலுத்தி உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி உள்ளோம் என்று கூறியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கல்கியில் வரவேற்பை பெற்ற பஹத் பாசில் ஆவேசம் வசனம்கல்கியில் வரவேற்பை பெற்ற பஹத் ... ஓட்டு குறைவாக வாங்கினாலும் திரிஷ்யம் நடிகைக்கு மீண்டும் கிடைத்த பதவி ஓட்டு குறைவாக வாங்கினாலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in