சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் கடத்தப்படுவதுதான் இப்படத்தின் கதை.
முதல் பாகத்தில் அரசியல் பின்னணி கொண்டவர்கள் அந்தக் கடத்தலில் ஈடுபடுவதைக் காட்டியிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதையும், கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஒரு கதாபாத்திரம் 'துணை முதல்வர்' கதாபாத்திரம் என்கிறார்கள்.
தற்போது நடந்த ஆட்சி மாற்றத்தில் அல்லு அர்ஜூனின் உறவினரான பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 'புஷ்பா 2' படம் வெளிவந்த பின் வில்லன் கதாபாத்திரம் துணை முதல்வர் என்று இருந்தால் அது சர்ச்சையை ஏற்படுத்துமே என யோசித்திருக்கிறது படக்குழு. அதன் விளைவாக தற்போது கதாபாத்திரத்தை மாற்றுகிறார்களாம். அதனால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என புதுத் தகவல் தெரிவிக்கிறது.
ஆந்திரத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அல்லு அர்ஜூன் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனால், அவருக்கும் பவன் கல்யாணுக்கும் இடையே உரசல் என்பதுதான் ஆந்திர சினிமா, அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் ஒரு விஷயம். எனவே, 'புஷ்பா 2' விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறதாம் படக்குழு.