சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . பல பிரபலங்களும் தங்களது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நயன்தாராவும் தனது கணவரான விக்னேஷ் சிவன், உயிர், உலக் என்ற இரண்டு மகன்களுடன் விளையாடி மகிழும் ஒரு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது இரண்டு மகன்களுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு காரணமே உயிர், உலக் என்ற இந்த இரண்டு மகன்கள் தான். அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.