‛காட் பிளஸ் யூ மாமே...' : ‛குட் பேட் அக்லி' இரண்டாவது போஸ்டர் வெளியீடு | மீண்டும் அனிமல் பட இயக்குனர் உடன் இணையும் ராஷ்மிகா | சூர்யா நடிக்க இருந்த 'கர்ணா' டிராப்பா ? | தாமதமாகும் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் : இயக்குனர் ஷங்கர் பதில் | கமல் Vs ரஜினி, விஜய் Vs அஜித் : ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகள் | வருகிற கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வரும் பேபி ஜான் | உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது : கமல் குறித்து ஷங்கர் பெருமிதம் | சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய கே.பி.ஒய்.பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் | மீண்டும் அரசியலுக்கு வருகிறார் சிரஞ்சீவி? | கோட் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் |
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி அபுதாபியில் சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதையடுத்து சமீபத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அபுதாபிக்கு சென்ற ரஜினிகாந்த் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சரத்குமாரும் தனது மனைவி ராதிகா மற்றும் மகனுடன் அபுதாபி நாராயணன் சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், அபுதாபி சுவாமி நாராயணன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். அமைதி, நல்லிணக்கம் கொண்ட இந்த ஆலயத்துக்கு நாங்கள் செல்வது இது மூன்றாவது முறையாகும். இந்த முறை மே 28ம் தேதி சென்றிருந்தோம். அங்கு காணப்பட்ட காட்சிகள் ஏற்பட்ட ஆன்மிக உணர்வுகள் அமைதியை தருகின்றன. அங்குள்ள சுவாமிஜியிடம் ஆசி பெற்று தெய்வீக தரிசனம் பெற்றோம் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார்.