அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயல்பாகவே அமைதியும், கூச்ச சுபாவமும் உடையவர். மெதுவாகத்தான் பேசுவார். அதிலும் தற்போது அவரது மகள் மறைவுக்கு பிறகு இன்னும் அமைதியாகி விட்டார். அவரது பேச்சில் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
சமீபகாலங்களில் அவர் காலில் செருப்பு அணிவதை தவிர்த்து வருகிறார். ஏதாவது வேண்டுதலாக இருக்கலாம் என்று எல்லோரும் கருதி வந்தார்கள். ஆனால் இனி செருப்பு அணிய மாட்டேன் என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஐதராபாத்தில நடந்த அவரின் 'மழை பிடிக்காத மனிதன் ' பட புரமோஷன் நிகழ்வில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது “நான் சில நாட்களுக்கு முன் செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது. செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது. ஆரோக்கியத்துக்கும் அது நல்லதுதான். அது மட்டுமின்றி நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். நான் எப்போது செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.