திருப்பதியில் நடிகர் அஜித் வழிபாடு | பிரதீப் ஆண்டனிக்கு டும் டும் | பேன்டஸி கதையில் உருவாகும் ‛ராக்கெட் டிரைவர்' | அரவிந்த்சாமி வழக்கு : தயாரிப்பாளருக்கு கைது வாரன்ட் | 'மகாராஜா' - 32 கோடி வசூல் என அறிவிப்பு | அஜித்தின் விடாமுயற்சி : அர்ஜூன் கொடுத்த அப்டேட் | விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‛பீனிக்ஸ் வீழான்' பட டீசர் வெளியானது | கருடன் ரூ.50 கோடி வசூல் | சிவகார்த்திகேயன் 23வது படத்தில் இணைந்த டான்சிங் ரோஸ் சபீர் | ஜூலையில் புதிய தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் மணிச்சித்திரதாழ் |
இயக்குனர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் இன்று(மே 27) காலை காலமானார்.
கடந்த 1996ல் ராஜ் கிரண், வனிதா நடித்த மாணிக்கம் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ். தொடர்ந்து சரத்குமார் நடித்த மாயி, திவான் ஆகிய படங்களையும், ஜீவன் நடித்த அதிபர் படத்தையும் இயக்கினார். கடைசியாக வருஷநாடு என்ற படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்தப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று(மே 27) காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சரத்குமார் இரங்கல்
நடிகர் சரத்குமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ், இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.