மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தங்கலான் படத்தை அடுத்து தற்போது அருண்குமார் இயக்கும் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளில் வெளியானது. அப்போது வெளியான போஸ்டரில், இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த போஸ்டருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நேரத்தில் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படத்தின் போஸ்டரில் இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்துக் கொண்டு நிற்கிறார். இது போன்ற போஸ்டர்கள் இன்றைய இளைய தலைமுறையை வெகுவாக பாதிக்கும். அவர்கள் மனதில் வன்முறை எண்ணங்களை தூண்டிவிடும். எனவே இப்படி விக்ரம் அரிவாளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.