மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இறுதி பிரச்சாரம் நேற்று நடந்தது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னதை எடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பிய போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி என்னை பழ ஜூஸ் குடிக்க சொன்னார்கள். அதன் பிறகு மோர் கொடுத்தார்கள். அவற்றை குடித்த உடனே மயக்கம் வந்தது. அடி நெஞ்சு தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. அதை அடுத்து என்னை பாலாறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தார்கள். ஆனாலும் வலி அதிகமாகவே இருந்தது. அதன் பிறகு தான் ஆம்புலன்சில் சென்னைக்கு கூட்டிட்டு வந்து ஐசியுவில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்த பிறகு இப்போது வலி குறைந்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் .
மன்சூரலிகானுக்கு நுரையீரல் வலி போக விஷ முறிவு ட்ரிப்ஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகே வலி குறைந்ததாகவும், இன்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.