ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகர் மன்சூரலிகான் இந்த லோக்சபா தேர்தலிலும் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாகவே அவர் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில், வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதி கிராமங்களில் இன்று காலை பிரச்சாரம் செய்திருக்கிறார் மன்சூரலிகான். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரது கட்சியின் தொண்டர்கள் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளார்கள். என்றாலும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலிதானா? இல்லை வேறு பிரச்சனையா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.




