அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகர் மன்சூரலிகான் இந்த லோக்சபா தேர்தலிலும் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாகவே அவர் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில், வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதி கிராமங்களில் இன்று காலை பிரச்சாரம் செய்திருக்கிறார் மன்சூரலிகான். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரது கட்சியின் தொண்டர்கள் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளார்கள். என்றாலும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலிதானா? இல்லை வேறு பிரச்சனையா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.