அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் |

சமீபத்தில் கோவையில் 'ரோமியோ' பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, “ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஆனது. இந்த நிலையில் படத்தின் புரமோசனுக்காக மதுரை சென்ற விஜய் ஆண்டனி இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அங்கு அவர் கூறியிருப்பதாவது: ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன். நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாக்கப்படுகிறது. அந்த மாதிரியான எதிர்மறை சிந்தனைகள் எனக்கு கிடையாது.
உலக நாடுகள் முழுக்க போர் நடக்கிறது. ஆனால் இந்தியா அமைதியாக இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவை அமைதியாக வைத்துக் கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்பு போர் நடந்திருக்கிறதா? சிலர் தவறு செய்திருக்கலாம். அதனால் எந்த ஆட்சியையும் தவறு சொல்ல முடியாது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவது தொடர்பான யோசனை இப்போதைக்கு இல்லை. எனது வேலையைப் பார்ப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது. என்றார்.