7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

சமீபத்தில் கோவையில் 'ரோமியோ' பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, “ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஆனது. இந்த நிலையில் படத்தின் புரமோசனுக்காக மதுரை சென்ற விஜய் ஆண்டனி இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அங்கு அவர் கூறியிருப்பதாவது: ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன். நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாக்கப்படுகிறது. அந்த மாதிரியான எதிர்மறை சிந்தனைகள் எனக்கு கிடையாது.
உலக நாடுகள் முழுக்க போர் நடக்கிறது. ஆனால் இந்தியா அமைதியாக இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவை அமைதியாக வைத்துக் கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்பு போர் நடந்திருக்கிறதா? சிலர் தவறு செய்திருக்கலாம். அதனால் எந்த ஆட்சியையும் தவறு சொல்ல முடியாது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவது தொடர்பான யோசனை இப்போதைக்கு இல்லை. எனது வேலையைப் பார்ப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது. என்றார்.