காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! | பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? |
தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் ஹீரோக்களான ரஜினி - கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் கூண்டுக்கிளி என்கிற ஒரே ஒரு படத்திலும், இப்போதைய காலகட்டத்தில் விஜய் - அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்கிற ஒரே ஒரு படத்திலும் மட்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த ராஜாவின் பார்வையிலே படத்தை இயக்கியவர் ஜானகி சவுந்தர். தயாரித்தவர் சவுந்தர பாண்டியன்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் உடனான அனுபவங்கள் குறித்து சவுந்தர பாண்டியன் பகிர்ந்து கொண்டபோது, கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதாவது ஜில்லா படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் தன்னையும் இன்னும் ஐந்து தயாரிப்பாளர்களையும் ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த விஜய் ஆளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகையாக கொடுத்தார் என்கிற தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அந்த சமயத்திலேயே இதுபோன்று சில தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ஒரு படம் நடித்துக் கொடுக்குமாறு அதன்மூலம் நாங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவோம் என்று கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு விஜய் பதில் ஏதும் கூறாமல் சிரித்துக் கொண்டே நகர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் கடைசி படத்தில் இது போன்று அவர் செய்தால் தங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.