என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த இடத்திற்கு பிறகு தனது 69 வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தில் நடித்து முடித்ததும் தீவிர அரசியலில் இறங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய், சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது சீரடி சாய்பாபா கோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த புகைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருக்காக சென்னையில் உள்ள கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோவில் கட்டி கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அப்போது விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது என்று தெரியவந்துள்ளது.