2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! |

சூர்யாவும் அவருக்குத் திருப்புமுனை தந்த இயக்குனர்களும், அந்த இயக்குனர்களுக்கு பதிலுக்கு 'திருப்பு' முனை தந்த சூர்யாவும் எனவும் பேசலாம் போலிருக்கிறது.
காதல் நாயகனாக வலம் வந்த சூர்யாவுக்கு 'நந்தா' படம் மூலம் ஒரு 'டெரர்' லுக்கைத் தந்து அவரை அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் பாலா. அதற்குப் பிறகு 'காக்க காக்க' படத்தின் மூலம் அந்த மாற்றத்தை முன்னேற்றியவர் இயக்குனர் கவுதம் மேனன். அதற்கும் பிறகு மாற்றம், முன்னேற்றம், வசூல் என 'சிங்கம்' படம் மூலம் உயர்த்தியவர் இயக்குனர் ஹரி.
அவர்கள் வாங்கித் தராத தேசிய விருதை நடிப்புக்காகவும், தயாரிப்புக்காகவும் 'சூரரைப் போற்று' படம் மூலம் சூர்யாவுக்கு வாங்கித் தந்தவர் இயக்குனர் சுதா கொங்கரா.
மேலே, சொன்ன நால்வரும் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்தப் படங்கள் 'டிராப்' ஆன வரலாற்றில் ஒன்றாகி உள்ளனர்.
சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் 'துருவ நட்சத்திரம்', சூர்யா - ஹரி கூட்டணியில் 'அருவா', சூர்யா - பாலா கூட்டணியில் 'வணங்கான்' ஆகிய படங்கள் டிராப் ஆகின. அந்த வரிசையில் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியின் 'புறநானுறு' படமும் இணைந்து விட்டது என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். படத்திற்கான இறுதி வடிவத்தை சூர்யாவிடம் சுதா தந்ததாகவும், அது சரியில்லை என சூர்யா நிராகரித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அதனால்தான் அந்தப் படத்திற்கான தேதிகளை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை பிடித்துப் போக அப்படத்தின் அறிவிப்பு வந்ததாம். சூர்யாவுக்காக மீண்டும் வேறொரு கதையை சுதா எழுதுவாரா அல்லது அவர் எழுதிய கதைக்கு வேறொரு ஹீரோவைத் தேடுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.