மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு என்பதை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார். படத் தயாரிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக இருக்கிறார். இதுதவிர கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.