என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு |
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரை தேடி கதாநாயகனாக நடிக்க பல வாய்ப்புகள் குவிகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளனர். இப்போது அஜித்தை வைத்து 'குட் பேட் அக்லி' என்கிற படத்தை தயாரிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர் மைத்ரி மூவி மேக்கர்ஸ். இதற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ.10 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.