என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் |

தமிழ் சினிமா எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்தில் தவித்து வருகிறது. இந்த வருடத்தின் மூன்றாவது வாரம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. ஆனாலும், இதுவரையில் லாபகரமான வெற்றி என எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியவில்லை.
நேற்று கூட ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரெபல்' படம் வெளிவந்தது. அப்படத்திற்கும் கூட ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. நேற்றுமுன்தினம் தான் இந்த ஆண்டிற்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின. முதல் போட்டியே சென்னையில் நடந்தது. அதுவும் சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்குமான போட்டி. அதனால், நேற்றுமுன்தினம் மாலையிலிருந்தே தமிழக கிரிக்கெட் ரசிகர்களை ஜுரம் பற்றிக் கொண்டது.
ஏற்கெனவே முழு ஆண்டுத் தேர்வுகளாலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது பிரீமியர் லீக் போட்டியும், சில தினங்களுக்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரமும் ஆரம்பமாகிவிட்டது. அதனால், தியேட்டர்களில் கூட்டம் மேலும் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்றாலும் பத்து சதவீதம் கூட தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்படவில்லை.
கிரிக்கெட், தேர்தல் முடிந்த பின்புதான் மக்கள் சினிமா பக்கம் திரும்புவார்கள். அதுவரையில் தள்ளாட்டம், திண்டாட்டம்தான் இருக்கும்.




