என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். சில ஹீரோக்களுக்கு திருப்புமுனையான படங்களைக் கொடுத்தவர். கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களை இயக்காமல் இருந்தார். அவர் திருப்புமுனை தந்த ஹீரோக்களை அவரை ஒதுக்கினார்கள். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.
அதோடு சல்மான் கான் நடிக்க உள்ள ஹிந்திப் படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இன்று அந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஏஆர் முருகதாஸ்.
“சல்மான்கான், தயாரிப்பாளர் சஜித் நடியத்வாலா ஆகியோருடன் இணைவதில் மிகவும் உற்சாகம். அசாத்திய திறமைசாலிகளுடன் இணைவது ஒரு பாக்கியம். மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்குத் தயாராகுங்கள். எங்களது படம் 2025ம் ஆண்டு 'ஈத்'துக்கு வர உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமீர்கான் நடித்த 'கஜினி' ஹிந்திப் படம் மூலம் 100 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்தவர் ஏஆர் முருகதாஸ். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகிரா' ஹிந்திப் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் பக்கம் போகிறார்.