ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். சில ஹீரோக்களுக்கு திருப்புமுனையான படங்களைக் கொடுத்தவர். கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களை இயக்காமல் இருந்தார். அவர் திருப்புமுனை தந்த ஹீரோக்களை அவரை ஒதுக்கினார்கள். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.
அதோடு சல்மான் கான் நடிக்க உள்ள ஹிந்திப் படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இன்று அந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஏஆர் முருகதாஸ்.
“சல்மான்கான், தயாரிப்பாளர் சஜித் நடியத்வாலா ஆகியோருடன் இணைவதில் மிகவும் உற்சாகம். அசாத்திய திறமைசாலிகளுடன் இணைவது ஒரு பாக்கியம். மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்குத் தயாராகுங்கள். எங்களது படம் 2025ம் ஆண்டு 'ஈத்'துக்கு வர உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமீர்கான் நடித்த 'கஜினி' ஹிந்திப் படம் மூலம் 100 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்தவர் ஏஆர் முருகதாஸ். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகிரா' ஹிந்திப் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் பக்கம் போகிறார்.