தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

மாமன்னன் படத்திற்கு பின் வாழை என்கிற படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் கபடி வீரராக துருவ் நடிக்கிறார். இதுதவிர ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் கார்த்தியை வைத்து மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்று இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் படத்தை இயக்கி முடித்தவுடன் கார்த்தி, மாரி செல்வராஜ் படம் தொடங்கும் என்கிறார்கள்.