விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 2013ம் ஆண்டு 'பெரியாதவர்' என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இதுதவிர 4 முறை மாநில விருது பெற்றார்.
தற்போது விக்ரம் நடிக்கும் அவரது 62வது படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை அருண்குமார் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்தின் முன்தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.