தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானார் எஸ்.ஜே. சூர்யா. இதைத்தொடர்ந்து 'குஷி' படத்தை தமிழில் விஜய்யை வைத்தும், தெலுங்கில் பவன் கல்யாணை வைத்தும் இயக்கி வெற்றி பெற்றார். இதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கி, நடித்தார்.
கடந்த சில வருடங்களாக மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் நடிகராக கலக்கி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. அவரது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஆக எஸ்.ஜே.சூர்யா களமிறங்க உள்ளார். 'கில்லர்' என்கிற த்ரில்லர் படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கவுள்ளார் . இதில் கார் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற உள்ளதால் இதற்காக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மான்ஸ்டர், பொம்மை ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.