ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

''சீதா ராமம், ஹை நான்னா” தெலுங்குப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். தமிழில் சில படங்களில் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிருணாள் தற்போது மும்பையில் இரண்டு குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு அபார்ட்மென்ட் குடியிருப்புகளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் குடும்பத்தினருக்கு சொந்தமானதாம். கங்கனாவின் அப்பா, சகோதரருக்குச் சொந்தமான அந்த குடியிருப்புகளை மிருணாளும், அவரது அப்பா பெயரிலும் வாங்கியிருக்கிறார்கள்.
மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள அந்த இரண்டு குடியிருப்புகளின் விலை 10 கோடி என்கிறார்கள். அதே குடியிருப்பில் தற்போது மிருணாள் வசித்து வருவதால் மிருணாள் எளிதில் பேச்சுவார்த்தை நடத்தி வாங்கியிருக்கிறார்கள். அந்த பழைய குடியிருப்பை புதுப்பிக்கும் வேலைகளில் மிருணாள் குடும்பத்தினர் இறங்கியிருக்கிறார்கள்.
மிருணாள் தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக 'பேமிலி ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார்.