நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அது என்ன 'பசுமை திருமணம்' எனக் கேட்கிறீர்களா ?. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தனது திருமணத்தை நடத்த உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். திருமண அழைப்பிதழ் கூட பேப்பரில் இல்லாமல் டிஜிட்டல் அழைப்பிதழ் மட்டுமே அளித்துள்ளார்களாம். திருமண நிகழ்வில் பட்டாசுகளை வெடிப்பது உள்ளிட்டவற்றிற்கும் 'நோ' சொல்லிவிட்டார்களாம். 'பசுமை திருமணம்' நடத்துவதற்காக தனி குழு ஒன்றையும் ரகுல் ப்ரீத்தும் அவரது வருங்காலக் கணவர் ஜாக்கியும் பணிக்கு வைத்துள்ளார்கள் என்று தகவல்.
பிப்ரவரி 21ம் தேதி தனது மூன்று வருட காதலர் ஜாக்கி பக்னானி என்பவரை கோவா-வில் நடைபெற உள்ள திருமண வைபவத்தில் மணந்து கொள்ள உள்ளார் ரகுல். திருமணக் கொண்டாட்டங்களை நேற்றே ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று மும்பையில் உள்ள ஜாக்கி வீட்டிற்கு ரகுல் குடும்பத்தினர் சென்றுள்ளனர். ரகுல், ஜாக்கி இருவரும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலும் வழிபாடு நடத்தி உள்ளனர்.
திருமணத்திற்கு முந்தைய மற்ற சடங்குகள் நாளை முதல் கோவாவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இத்திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம்.
ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் “புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'இந்தியன் 2' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.