300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'ஆட்டோ சங்கர்' வெப் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்வயம் சித்தா தாஸ். தற்போது அவர் நடித்து வரும் படம் 'அக்காலி'. பிபிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் தயாரிக்கிறார். புதுமுகம் ஜெயக்குமார் நாயகனாக நடிக்கிறார். வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்ய, அனிஷ் மோகன் இசை அமைத்துள்ளார்.
முகமது ஆசிப் ஹமீத் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது “அக்காலி என்பதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள். அப்படி ஒரு சிலர் இருப்பதாக நம்பப்படுகிறது. அதையே கதையின் மூலக் கருவாக வைத்து இந்த படம் உருவாகிறது. இது ஒரு திரில்லர் படம்.. சென்னையிலுள்ள பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் பாழடைந்த பங்களா செட் அமைத்து படமாக்கினோம். இந்த அரங்கை தோட்டா தரணி மிகவும் வித்தியாசமாக அமைத்து தந்தார். அங்கு 2 வாரங்கள் கிளைமாக்ஸ் படமானது. ஸ்வயம் சித்தா தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் கையாளும் ஒரு வழக்குதான் படத்தின் கதையாகும். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது” என்றார்.