அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே | எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது | ''மோகன்லால், விக்ரமுக்கு ஒரு ஹிட்; எனக்கு ரெண்டு ஹிட்'': மகிழ்ச்சியில் சுராஜ் வெஞ்சாரமூடு | எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு |
'ஆட்டோ சங்கர்' வெப் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்வயம் சித்தா தாஸ். தற்போது அவர் நடித்து வரும் படம் 'அக்காலி'. பிபிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் தயாரிக்கிறார். புதுமுகம் ஜெயக்குமார் நாயகனாக நடிக்கிறார். வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்ய, அனிஷ் மோகன் இசை அமைத்துள்ளார்.
முகமது ஆசிப் ஹமீத் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது “அக்காலி என்பதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள். அப்படி ஒரு சிலர் இருப்பதாக நம்பப்படுகிறது. அதையே கதையின் மூலக் கருவாக வைத்து இந்த படம் உருவாகிறது. இது ஒரு திரில்லர் படம்.. சென்னையிலுள்ள பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் பாழடைந்த பங்களா செட் அமைத்து படமாக்கினோம். இந்த அரங்கை தோட்டா தரணி மிகவும் வித்தியாசமாக அமைத்து தந்தார். அங்கு 2 வாரங்கள் கிளைமாக்ஸ் படமானது. ஸ்வயம் சித்தா தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் கையாளும் ஒரு வழக்குதான் படத்தின் கதையாகும். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது” என்றார்.