'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'லால் சலாம்'.
இப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் 'திமிறி எழுடா' என்ற பாடல் 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த பாடகர்களான ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரது குரலை 'ஏஐ' மூலம் உருவாக்கி அப்பாடலை அமைத்திருந்தார் ஏஆர் ரகுமான்.
அது குறித்து பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்கள். டெக்னாலஜி மூலம் மறைந்தவர்களது குரலையும், உருவத்தையும் பயன்படுத்துவது சரியல்ல என்றும் சொன்னார்கள்.
இதற்கு ஏஆர் ரகுமான், “அவர்களது குடும்பத்தினரிடம் இதற்காக அனுமதி பெற்றோம். மேலும், நல்லதொரு சம்பளமும் அதற்காக அளிக்கப்பட்டுள்ளது. டெக்னாலஜி என்பதை சரியாகப் பயன்படுத்தினால் அது ஆபத்தல்ல, தொல்லையும் அல்ல…,” எனக் குறிப்பிட்டுள்ளார்.