20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட டொவினோ தாமஸ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஒரு படம் தான் 'நடிகர் திலகம்'. சுமார் நாற்பது கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வில்லன் நடிகர் லாலின் மகனும், இயக்குனருமான ஜீன்பால் லால் (லால் ஜூனியர்) இயக்கி வருகிறார்.
நடிகர் திலகம் என்றாலே அது சிவாஜி கணேசன் தான். அப்படிப்பட்டவருக்கு மட்டுமே சொந்தமான அடைமொழியை மலையாளத்தில் ஒரு படத்திற்கு ஒரு டைட்டிலாக வைத்து இருக்கிறார்கள் என்கிற செய்தி இங்கே தமிழகத்தின் தெரிய வந்ததும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவையை சேர்ந்த சிவாஜியின் தீவிர ரசிகர்கள் இந்த படத்தின் டைட்டிலை வைக்கக் கூடாது என்றும் வேறு டைட்டிலை மாற்றுங்கள் என்றும் படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதினர்.
மேலும் இது குறித்து நடிகர் பிரபுவின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். தனது தந்தையின் நடிகர் திலகம் பட்டத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை பிரபுவும் விரும்பவில்லை. இதை தொடர்ந்து தனது நண்பரும், வில்லன் நடிகருமான லாலை அழைத்து தனது எண்ணத்தை அவரிடம் தெரிவித்து படத்தின் இயக்குனரான அவர் மகனிடம் கூறி டைட்டிலை மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். படத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமானது என்றாலும் கூட மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்த கோரிக்கை என்பதால் அதை தட்ட விரும்பாமல் தற்போது இந்தப்படத்திற்கு நடிகர் என்று மட்டுமே டைட்டிலை மாற்றி வைத்துள்ளார்கள்.
மேலும் இந்த தகவலை நடிகர் பிரபுவுக்கு தெரிவித்து நீங்களே கேரளா வந்து இந்த படத்தின் டைட்டிலை வெளியிடுங்கள் என சிறப்பு விருந்தினராகவும் அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவில் நேரில் கலந்து கொண்ட பிரபு, இந்த படத்தின் டைட்டிலை அறிவித்தார். மேலும் கேரள ரசிகர்கள் எப்போதுமே தன் தந்தையின் மீது காட்டி வரும் அன்பு குறித்து நெகிழ்ந்து போய் பேசிய பிரபு, தனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக படக்குழுவினருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.