தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், நானி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் பிரபல இயக்குனர் ராஜமவுலியின் டைரக்சனின் நடித்து விட்டனர். ஆனால் உச்சத்தில் இருக்கும் நடிகர் மகேஷ்பாபு இதுவரை ராஜமவுலி டைரக்சனின் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார் என்பது கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது.
தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டதாக ராஜமவுலியின் தந்தையும் அவரது படங்களின் கதை இலாக்காவில் முக்கிய பங்கு வகிப்பவருமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார் இந்த படத்தின் சில தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வதற்காக நடிகர் மகேஷ்பாபு தற்போது தனியாக சென்று ஜெர்மனிக்கு பயணம் கிளம்பி சென்றுள்ளதும் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.