நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படம் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருகிறது. பீரியட் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (ஜன.,3) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது இப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள், படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக கேப்டன் மில்லர் படம் விஸ்வாசம் படத்தைப் போலவே இருக்கும் என்று தயாரிப்பாளர் கூறினார்.
அதையடுத்து தனுஷ் பேசும்போது, ‛‛சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய காலத் திருடன். அது உங்களுக்கே தெரியாமல் உங்களின் நேரத்தை திருடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நான்கு பேர் ஒன்றாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை தவிர்த்து விட்டு மொபைலில் முகம் பார்த்து பேசுவது வேண்டாம்'' என்று கூறினார். அதோடு, ‛‛வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் அளவாக பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது'' என்றும் தனுஷ் பேசியது கவனம் பெற்றுள்ளது.