ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் மூன்றாவது படம் அனிமல். ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த அனிமல் படம் ஹிந்தியில் தயாரான போதும், தமிழ், தெலுங்கிலும் வெளியானது. மேலும் இப்படம் திரைக்கு வந்தபோது பாலியல் அத்துமீறல், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனை அப்படத்தில் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும் இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அனிமல் படம் 800 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது.
இந்த நிலையில் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும், இரண்டாம் பாகத்திற்கு அனிமல் பார்க் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.