என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் மூன்றாவது படம் அனிமல். ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த அனிமல் படம் ஹிந்தியில் தயாரான போதும், தமிழ், தெலுங்கிலும் வெளியானது. மேலும் இப்படம் திரைக்கு வந்தபோது பாலியல் அத்துமீறல், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனை அப்படத்தில் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும் இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அனிமல் படம் 800 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது.
இந்த நிலையில் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும், இரண்டாம் பாகத்திற்கு அனிமல் பார்க் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.