நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் மன்சூர். இதை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான்.
இந்த விவகாரத்தில் த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென கூறிய நீதிபதி எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? என மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபாராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். மேலும் அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.