கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இயற்கைப் பேரிடரான மழை, வெள்ளம் வந்தாலே டாப் நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது வழக்கம். சினிமாவில் மக்களுக்காக உழைக்கிறோம் என்ற வீர வசனம் பேசி அரசியலில் இறங்க உள்ள தங்களது ஆசையை சிலர் வெளிப்படுத்துவதால்தான் இந்த கேள்வி வருகிறது. தங்கள் மக்களின் துயரங்களில் பங்கெடுக்கிறோம் என்று முந்தைய காலங்களில் இயற்கைப் பேரிடர் வந்த போது முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கோடிகள் வரையிலும் கொட்டிக் கொடுத்தார்கள்.
ஆனால், இந்த வருடத்தில் மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்ட போது சில நடிகர்கள் மட்டுமே சில லட்சங்களை நிவாரண நிதியாக வழங்கினார்கள். டாப் நடிகர்கள் பலரும் அமைதி காத்து வருகிறார்கள். தற்போது தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்ட போதும் கூட அவர்கள் அமைதியாகவே இருப்பது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நாங்களும் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்கு சில இடங்களில் மட்டும் அவர்களது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த சிலரை ஓரிரு உதவிகளைச் செய்ய வைத்து அதை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டதோடு அவர்கள் நிவாரண உதவியை முடித்துக் கொண்டுள்ளனர்.
சில நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ போடுவதுடன் தங்களது சேவையை முடித்துக் கொள்கின்றனர். டாப் நடிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தமிழகத்தில் மழை வெள்ளம் வந்துள்ளது என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா, தெரியாதா என்ற நிலையில் எதையுமே கண்டு கொள்ள மாட்டார்கள்.
அண்டை மாநிலங்களில் இயற்கைப் பேரிடர் வந்த போது கூட அவர்களின் துயரைத் துடைக்க உதவி செய்த இந்த டாப் நடிகர்கள் தங்களது சொந்த மாநில மக்களின் துயரத்தில் பெருமளவில் பங்கு கொள்ளாதது ஏன் ?. சினிமாவில் பேசும் 'பன்ச்' வசனங்களை நிஜ வாழ்க்கையில், காட்டாமல் ஒதுங்கிப் போவது ஏன் ?, என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.