கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியதில் ஏற்பட்ட மழையின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. பெரும்பாலும் சென்னையில் வசிப்பவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் சிக்கி அவதிப்பட்டனர். சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல விஷ்ணு விஷால், நமீதா, ஆமிர்கான், போன்ற பிரபலங்கள் கூட மழைநீர் சூழப்பட்டதால் தங்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன், சென்னையில் மிக மையப் பகுதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் வசிக்கும் தெருவில் சூழப்பட்ட சாக்கடை நீரால் தானும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக தவித்தது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டமாக ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “இந்த பகுதியில் எப்போதுமே மழை நீர் தேங்காது. குறிப்பாக 2015ல் பெய்த மழைக்கு கூட இங்கே நீர் தேங்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் காரணமாக இந்த முறை மழை நீர் தேங்கியதுடன் சாக்கடை நீரும் சேர்ந்து கொண்டு தரைத்தளத்தில் வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எங்களை காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.