'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி வில்லங்கத்தில் சிக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்படி சென்னையில் மன்சூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து மன்னிப்பு கோரினார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக த்ரிஷாவிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் அழைத்து இருந்தனர். ஆனால் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிவிட்டதால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறை அனுப்பிய கடிதத்துக்கு நடிகை திரிஷா பதில் தெரிவித்துள்ளார்.