டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி வில்லங்கத்தில் சிக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்படி சென்னையில் மன்சூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து மன்னிப்பு கோரினார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக த்ரிஷாவிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் அழைத்து இருந்தனர். ஆனால் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிவிட்டதால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறை அனுப்பிய கடிதத்துக்கு நடிகை திரிஷா பதில் தெரிவித்துள்ளார்.