சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி வில்லங்கத்தில் சிக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்படி சென்னையில் மன்சூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து மன்னிப்பு கோரினார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக த்ரிஷாவிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் அழைத்து இருந்தனர். ஆனால் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிவிட்டதால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறை அனுப்பிய கடிதத்துக்கு நடிகை திரிஷா பதில் தெரிவித்துள்ளார்.