துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தலின் படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸில் ஆஜராகி நேற்று விளக்கமும் அளித்தார் மன்சூர் அலிகான்.
மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறி வந்த மன்சூர் இன்று, ‛‛எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!!'' என கவிதை நடையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தெய்வ பண்பு'' என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் த்ரிஷா, மன்சூர் அலிகான் இடையேயான பஞ்சாயத்து முடிவுக்கு வரும் என தெரிகிறது.