ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தலின் படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸில் ஆஜராகி நேற்று விளக்கமும் அளித்தார் மன்சூர் அலிகான்.
மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறி வந்த மன்சூர் இன்று, ‛‛எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!!'' என கவிதை நடையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தெய்வ பண்பு'' என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் த்ரிஷா, மன்சூர் அலிகான் இடையேயான பஞ்சாயத்து முடிவுக்கு வரும் என தெரிகிறது.