ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
‛லெஜண்ட்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சரவணன். சென்னையில் வணிகர் சங்கம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‛‛எந்த நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் காக்கா, கழுகு கதைகள், பட்டம் போன்றவற்றால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயரலாம். நாம் உயர்ந்தால் நாடும் உயரும்,'' என்றார்.
கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து சமூகவலைதளங்களில் ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வந்தனர். இதுதொடர்பாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய காக்கா, கழுகு கதையும், அதற்கு லியோ பட சக்சஸ் மீட்டில் விஜய் தந்த பதில் கதையும் பேசு பொருளானது. இதுகுறித்து தான் சரவணன் இப்படி மறைமுகமாக பேசி உள்ளார்.