20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
‛லெஜண்ட்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சரவணன். சென்னையில் வணிகர் சங்கம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‛‛எந்த நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் காக்கா, கழுகு கதைகள், பட்டம் போன்றவற்றால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயரலாம். நாம் உயர்ந்தால் நாடும் உயரும்,'' என்றார்.
கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து சமூகவலைதளங்களில் ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வந்தனர். இதுதொடர்பாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய காக்கா, கழுகு கதையும், அதற்கு லியோ பட சக்சஸ் மீட்டில் விஜய் தந்த பதில் கதையும் பேசு பொருளானது. இதுகுறித்து தான் சரவணன் இப்படி மறைமுகமாக பேசி உள்ளார்.