‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

‛லெஜண்ட்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சரவணன். சென்னையில் வணிகர் சங்கம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‛‛எந்த நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் காக்கா, கழுகு கதைகள், பட்டம் போன்றவற்றால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயரலாம். நாம் உயர்ந்தால் நாடும் உயரும்,'' என்றார்.
கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து சமூகவலைதளங்களில் ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வந்தனர். இதுதொடர்பாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய காக்கா, கழுகு கதையும், அதற்கு லியோ பட சக்சஸ் மீட்டில் விஜய் தந்த பதில் கதையும் பேசு பொருளானது. இதுகுறித்து தான் சரவணன் இப்படி மறைமுகமாக பேசி உள்ளார்.