ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறவர் டேனியல் அனி போப். விஜய்சேதுபதியுடன் 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு யாமிருக்க பயமே, மாசு என்கிற மாசிலாமணி, ரங்கூன், ஜருகண்டி, ஜாங்கோ, மாநாடு, ரெய்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
டேனியலிடம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடகைக்கு வீடு தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்துள்ளது. பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனத்தின் மீது டேனியல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:
“இணைய தளத்தில் வாடகைக்கு வீடு தேடினேன். அப்போது ஒரு நிறுவனம் தங்களிடம் 17 லட்சம் கட்டினால் வீடு பார்த்து தருவதாக தெரிவித்தது. மாதா மாதம் தாங்களே வாடகையை செலுத்தி விடுவதாகவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதலீட்டு தொகையை திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்தனர். அதை நம்பி 17 லட்சம் கொடுத்து போரூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றேன். அந்த வீட்டில் குடியேறிய 3 மாதங்களுக்கு பிறகு வீட்டு உரிமையாளர் வந்து வாடகை தரவில்லை என்று சொல்லி வீட்டை காலிசெய்யும்படி கூறினார். அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனம் இப்படி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்'' என்று வீடியோவில் பேசியுள்ளார்.