Advertisement

சிறப்புச்செய்திகள்

கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ப்பிணியாக நடிக்க தயங்கிய சிருஷ்டி டாங்கே

08 நவ, 2023 - 03:28 IST
எழுத்தின் அளவு:
Srushti-Dange-who-hesitated-to-act-pregnant

'காதலாகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு யுத்தம் செய், மேக்னா, எனக்குள் ஒருவன், கத்துகுட்டி, நவரச திலகம், தர்மதுரை, அச்சமின்றி, பொட்டு, சக்ரா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம் 'கட்டில்'. இதனை கணேஷ் பாபு இயக்கி, நடித்துள்ளார். 3 தலைமுறைகளாக ஒரு வீட்டில் தொடர்ந்து பாதுகாக்கப்படும் ஒரு கட்டிலை மையமாக கொண்ட கதை. இதனை எடிட்டர் பி.லெனின் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே கணேஷ் பாபு ஜோடியாகவும், கர்ப்பிணி பெண்ணாகவும் நடித்திருக்கிறார். இது குறித்து அவர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது “இந்த படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கவேண்டும் என்றார்கள். முதலில் எனக்குப் பிடிக்கவில்லை, பப்ளி கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இந்தக்கேரக்டரில் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். இயக்குனர் கணேஷ் கதை சொன்ன போது இந்த கதாபாத்திரத்தின் கனம் புரிந்தது. தனலட்சுமி கேரக்டர் மிக வலுவானதாக இருந்தது. எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என்றார்.

விழாவில் இயக்குனர் கணேஷ் பாபு பேசும்போது “எடிட்டர் லெனின் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பு செய்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்தக்கதை. ஶ்ரீகாந்த் தேவாவின் 101வது படம் இது. அவருக்கு என் குறும்படம் மூலம் தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. சிருஷ்டி டாங்கே அர்ப்பணிப்பு உள்ள ஒரு ஹீரோயின். இந்தப்படத்தில் மிகச் சிறப்பான ஒரு கதாப்பாத்திரம் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கையில் ஏறுமுகம் தான்” என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துபாய் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய கார்த்திதுபாய் தொழிலாளர்களுடன் தீபாவளி ... செந்தில் கதை நாயகனாக நடிக்கும் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' செந்தில் கதை நாயகனாக நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)