டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லியோ வெற்றி விழாவில் இதனை விஜய் சூசகமாக தெரிவித்து விட்டார். இதனால் இதுகுறித்து திரைப்பட நட்சத்திரங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: சினிமா நல்ல விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது, கெட்ட விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. நிறைய நல்ல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணமாக, 'ஜெய்பீம்' படத்தால் பழங்குடி மக்களுக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. விஜய் அரசியலுக்கு வருதற்கான வேலைகளைச் செய்து வருகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாருக்கும் அரசியலுக்கு வருதற்கான உரிமையிருக்கிறது. ஆனால், அதற்கு முன் அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு அரசியலுக்கு வரவேண்டும். விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்தபிறகு அரசியலுக்கு வரவேண்டும். என்றார்.