எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். நேரம் படத்தையும் இவர் தான் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் தந்த வரவேற்பு அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ‛கோல்டு' படத்திற்கு கிடைக்கவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்தின் தோல்விக்காக வருத்தம் தெரிவித்த அல்போன்ஸ் அடுத்த படத்தை அதை சரி செய்வதாக கூறினார்.
தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சினிமா படம் மட்டும் இனி இயக்க மாட்டேன், விலகுவதாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவில், ‛‛தியேட்டர்களுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்த போகிறேன். எனக்கு ‛ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்' குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால் தொடர்ச்சியாக ஆல்பம், குறும்படங்கள் மற்றும் ஓடிடி தொடர்பான படங்களை எடுப்பேன். நிச்சயமாக சினிமாவை விட்டு போக மாட்டேன். ஏனென்றால் அதைதவிர எனக்கு வேறு வழியில்லை'' என தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்ரனின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.