டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? |

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். நேரம் படத்தையும் இவர் தான் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் தந்த வரவேற்பு அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ‛கோல்டு' படத்திற்கு கிடைக்கவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்தின் தோல்விக்காக வருத்தம் தெரிவித்த அல்போன்ஸ் அடுத்த படத்தை அதை சரி செய்வதாக கூறினார்.
தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சினிமா படம் மட்டும் இனி இயக்க மாட்டேன், விலகுவதாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவில், ‛‛தியேட்டர்களுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்த போகிறேன். எனக்கு ‛ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்' குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால் தொடர்ச்சியாக ஆல்பம், குறும்படங்கள் மற்றும் ஓடிடி தொடர்பான படங்களை எடுப்பேன். நிச்சயமாக சினிமாவை விட்டு போக மாட்டேன். ஏனென்றால் அதைதவிர எனக்கு வேறு வழியில்லை'' என தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்ரனின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.