மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
கிண்டி, வேளச்சேரியைச் சேர்ந்தவர் திருமால், 54; ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 7வது நீதிமன்ற நீதிபதி. இம்மாதம் 18ல் 'பீனிக்ஸ் மால்' அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பூங்கா கதவு மூடுவது தொடர்பாக, அங்கிருந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து சேர்ந்து, நீதிபதியை ஆபாச வார்த்தைகளில் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில், நீதிபதி திருமால் புகார் அளித்தார். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் ஜெயமணி, மாரிமுத்துவை கிண்டி போலீசார், நேற்று கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவித்தனர்.