‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சென்னை: நடிகர் விஷாலின் புகாரை தொடர்ந்து இந்தி டப்பிங்கிற்கு சென்னை அலுவலகத்திலேயே தணிக்கைசெய்து கொள்ளலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நடிகர் விஷால் மார்க் ஆண்டனி இந்தி டப்பிங் படத்திற்காக மும்பை தணிக்கை துறை அலுவலக அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டனர் என கூறிய புகார் பெரும்பரபரப்பை உருவாக்கியது.
இதனையடுத்து மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதன்படி தென்னிந்திய படங்கள் தொடர்புடைய தணிக்கை அலுவலகத்திலேயே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். பரிசோதனை முயற்சியாக வரும் அக்.,20 ம் தேதி முதல் அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
முன்னதாக இந்தி டப்பிங் படங்களுக்கு தணிக்கை மும்பை அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.