ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை குவித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது நடிகர் விஜயை வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ளார். வருகின்ற அக்டோபர் 19ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு வருகிறார். இதில் ரஜினிகாந்த் 171வது படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது: "ரஜினி 171வது படம் நான் இதுவரை இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். எனக்கு இது ஒரு புதிய முயற்சி. இந்த கதையை 20 நிமிடம் ரஜினி சாரிடம் கூறினேன். சமீபத்தில் ரஜினி சார் உடன் இப்படம் குறித்து போனில் பேசும் போது 'தூள் கிளப்பிற்லாம் கண்ணா' என ரஜினி சார் கூறினார். இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த படத்திற்காக ஆபிஸ் பூஜை நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரலில் துவங்கும்" என தெரிவித்தார்.