நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
விஷ்ணு விஷால், அமலாபால், சரவணன் நடித்த ராட்சசன் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் 2ம் பாகத்தின் பணிகள் தொடங்கி விட்டது என்று படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
'ராட்சசன்' படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இயக்குநர் ராம்குமார் இந்தப் படத்திற்கான கதையை சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படத்தின் திரையரங்கு வெளியீடு வரை இந்தப் படம் மீது நாங்கள் அனைவரும் வைத்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஒரு தயாரிப்பாளராக, 'ராட்சசன்' எங்கள் எல்லோருக்கும் 'கேம் சேஞ்சர்' படமாக அமையும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், எங்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தப் படத்திற்குக் கொடுத்த வரவேற்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது.
படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனாலும், திரையரங்குகளில் 'ராட்சசன்' படத்திற்குக்கு கிடைத்த கைதட்டல் மற்றும் பாராட்டுகள் இப்போதும் உற்சாகப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெரும் நம்பிக்கையை ஆக்செஸ் பிலிம் பேக்டரிக்கு தரும் விதமாகவும் இந்தப் படம் அமைந்தது.
ராட்சசன் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆவதை ஒட்டி ஆக்சஸ் பிலிம் பேக்டரி 'ராட்சசன் 2' படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அறிவிக்கிறது. மேலும், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.