22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனை இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
திரையுலக கலைஞர்களுக்கு மிகப் பெரிய கனவு ஆஸ்கர். உலகளவில் சினிமாவில் உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருதுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் 2024ல் நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மயைாளத்தில் வெளியான 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது.
கேரளாவில் பெய்த பெரும் மழை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்தார். டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சினிவாசன், லால், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம் ரூ.200 கோடி வசூல் சாதனை புரிந்தது.
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் 2018 படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு தேர்வாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.