தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனை இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
திரையுலக கலைஞர்களுக்கு மிகப் பெரிய கனவு ஆஸ்கர். உலகளவில் சினிமாவில் உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருதுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் 2024ல் நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மயைாளத்தில் வெளியான 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது.
கேரளாவில் பெய்த பெரும் மழை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்தார். டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சினிவாசன், லால், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம் ரூ.200 கோடி வசூல் சாதனை புரிந்தது.
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் 2018 படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு தேர்வாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.