அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சென்னை: என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள் என விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா(16) சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக திரையுலகினர் பலரும் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது சாதி, மதம், பணம், பொறுமை, வலி, வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்களை அனைத்தையும் அவளே துவங்கி வைப்பாள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.