இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சென்னை: என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள் என விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா(16) சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக திரையுலகினர் பலரும் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது சாதி, மதம், பணம், பொறுமை, வலி, வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்களை அனைத்தையும் அவளே துவங்கி வைப்பாள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.