ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சமுத்திரகனி இப்போது தமிழை விட தெலுங்கில் அதிக பிசியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் அவர் இயக்கிய 'புரோ' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் சமுத்திரகனிக்கு படம் இயக்கும் வாய்ப்பும் தேடி வர துவங்கி உள்ளது. தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்பதற்காக தெலுங்கு பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இயக்கிய 'புரோ' படத்தைப் பார்த்துட்டு சிரஞ்சீவி பாராட்டினார். எங்க குடும்பத்துல இருக்கிற எல்லா ஹீரோவையும் இயக்குங்கன்னு சொன்னார். அவரை இயக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அவர் பிசியான நடிகர். எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று நினைக்கிறேன். பிரபாஸ் நடிக்கிற 'ஸ்பிரிட்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வருகிறேன் என்கிறார் சமுத்திரகனி.