நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
சமுத்திரகனி இப்போது தமிழை விட தெலுங்கில் அதிக பிசியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் அவர் இயக்கிய 'புரோ' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் சமுத்திரகனிக்கு படம் இயக்கும் வாய்ப்பும் தேடி வர துவங்கி உள்ளது. தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்பதற்காக தெலுங்கு பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இயக்கிய 'புரோ' படத்தைப் பார்த்துட்டு சிரஞ்சீவி பாராட்டினார். எங்க குடும்பத்துல இருக்கிற எல்லா ஹீரோவையும் இயக்குங்கன்னு சொன்னார். அவரை இயக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அவர் பிசியான நடிகர். எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று நினைக்கிறேன். பிரபாஸ் நடிக்கிற 'ஸ்பிரிட்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வருகிறேன் என்கிறார் சமுத்திரகனி.