ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? |
சமுத்திரகனி இப்போது தமிழை விட தெலுங்கில் அதிக பிசியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் அவர் இயக்கிய 'புரோ' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் சமுத்திரகனிக்கு படம் இயக்கும் வாய்ப்பும் தேடி வர துவங்கி உள்ளது. தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்பதற்காக தெலுங்கு பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இயக்கிய 'புரோ' படத்தைப் பார்த்துட்டு சிரஞ்சீவி பாராட்டினார். எங்க குடும்பத்துல இருக்கிற எல்லா ஹீரோவையும் இயக்குங்கன்னு சொன்னார். அவரை இயக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அவர் பிசியான நடிகர். எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று நினைக்கிறேன். பிரபாஸ் நடிக்கிற 'ஸ்பிரிட்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வருகிறேன் என்கிறார் சமுத்திரகனி.